Monday, September 23, 2013

பணத்தால் வெற்றியை நிர்ணயிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்! – தயாசிரி ஜயசேக்கர

குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார். ஹெட்டிபொல பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜயசிரி ஜயசேக்கரவின் வருகையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சி இத்தேர்தலில் எவ்வாறிருக்கும் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 37 பேரும் சேர்ந்து 165000 வாக்குகளையே பெற்றனர். 336,327 வாக்குகளை என்னால் பெற முடிந்தது.

குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சரிந்து வீழ்ந்துள்ளது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குருணாகல் மாவட்ட தலைவர் அகில காரியவசத்தின் தொகுதி 18 வீத வாக்குகளையே பெற்றுள்ளது.

விருப்பு வாக்குகளுக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளோம். எனவே பணத்தால் வெற்றியைக் கணிப்பிட முடியாது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவும் தயாசரி ஜயசேக்கர ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com