Tuesday, September 24, 2013

ஜே வி பி செய்வதை சரத் பொன்சேகாவினால் செய்யமுடியாது!

ஜே.வி.பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித் துள்ள கருத்து தொடர்பிலேயே வாசுதேவ தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜே வி பி எதிர்க்கட்சியாக செய்யவேண்டிய பணிகளை செய்கிறது சில வேளைகளில் தடம்மாறிக்போகிறது எனினும் சரத் பொன்சேகா ஊழலை ஒழிக்கப் போவதாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாகவும் கூறுகிறார் இது சாத்தியப்படாத விடயம் என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com