Tuesday, September 24, 2013

பதவியை இராஜினாமாச் செய்கிறார் தி.மு..! முதலமைச்சராகின்றார் தி.மு மைந்தன் அநுராத!

மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதமர் தி.மு. ஜயரத்னவின் மைந்தன் அநுராத ஜயரத்னவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதிகூடிய விருப்பு வாக்குகளில் இரண்டாம் இடத்தில் நிற்கின்ற முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்காக வேண்டி, பிரதமர் தி.மு. ஜயரத்ன தனது மந்திரிப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பிரதமரின் இராஜினாமாவோடு வெற்றிடமாகுகின்ற இடத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பது மற்றும் சரத் ஏக்கநாயக்கவுக்கு அமைச்சரவையில் அமைச்சுப் பதவியொன்று வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க, பிரதமரின் மகன் அநுராத ஜயரத்ன, ஜனாதிபதி இலங்கைக்கு வந்தவுடனேயே சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com