Friday, August 2, 2013

15 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகம்

வட்டுக் கோட்டைப் பகுதியில் யூலை மாதம் 26 ஆம் திகதி 15 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சங்கானை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலையே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com