Saturday, July 13, 2013

மன்னம்பிட்டியில் கோரவிபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு!

மன்னம்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட பஸ்வண்டியின் நடாத்துனரான கோட்டக்கல்லாறைச் சேர்ந்த சிவராசா சீவலக்சன் (23) என்பவர் கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் செயலமர்வொன்றை முடித்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த தனியார் மினி பஸ் மன்னம்பிட்டியில் வைத்து மரமொன்றுடன் நேற்று அதிகாலை மோதுண்டு விபத்துக்குள்ளானது இதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படு காய மடைந்துள்ளனர். ஐந்தாவது நபர் கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

இந்த விபத்தில் ஏற்கெனவே சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் போதனாசிரியர் வேலுப் பிள்ளை, சீவரெத்தினம் (ஜீவா) அந்த பஸ் வண்டியின் சாரதியுமாக நான்கு பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தனர். காயமடை ந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  July 14, 2013 at 4:12 AM  

Not enough sleeping and over night driving is the main cause for these kind of tragedy.
The government should control the pathetic lost of the civilians.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com