Sunday, July 28, 2013

நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் சிராஸ்க்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வட மாகாணசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வந்த எம்.சிராஸ் அக்கட்சியினால் வெளியிடப்பட்ட வேட்பாளர் விபரத்தில் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை அதில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி சுமார் 1000இற்க்கும் மேற்பட்ட மக்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியை வழிமறித்து இன்று(28.07.2013) காலை 11 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்’ ‘பனை மரத்தில் வெளவலா, எங்களுக்கே சவாலா’ ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காண முடிந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com