Sunday, July 28, 2013

ஆதரவாளர்களது வேண்டுதலை அடுத்து சுயேட்சையாக குதிக்க தயாராகும் தயாமாஸ்டர்

புலிகளின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட் தயாமாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் நேற்று(27.07.2013) சுதந்திரக்கட்சியால் வெளியிடப்பட்ட வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுபவர்களது பொயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காததால் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்து வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்களது வேண்டுதலை அடுத்து சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com