Thursday, July 25, 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு மன்னாரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் இன்று தொடக்கம் வேட்பு மனு கோரப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தனது வேட்பு மனுவை இன்று முதல் முதலாக தாக்கல் செய்துள்ளதாக மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று(25.07.2013) காலை 11 மணியளவில் 8 வேட்பாளர்களைக் கொண்ட வேட்பு மனு மன்னார் தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் வேட்புமனுவில் முருங்கனைச் சேர்ந்த தமிழ், முஸ்ஸிம் வேட்பாளர்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com