Thursday, July 25, 2013

யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்திற்கு பெறுமதிமிக்க இருநூறு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு இன்று (25)காலை 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில்,

இந்த இருநூறு பெறுமதியான புத்தகங்களும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரிதும் பயனுடையதாக அமைகின்றது என்று குறிப்பிட்டதுடன், இந்நூல்களை அன்பளிப்பு செய்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இணைப்பாளர் மேத்தா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வுக்கு யாழ் மாநகர சபை மேஜர் யோகேஸ்வரி பற்குணராஜா உலக சுகாதார ஸ்தாபன இலங்கையின் இணைப்பாளர் சிவராஜா மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


(பாறூக் சிகான்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com