Friday, July 26, 2013

புலிகள் மறைத்து வைத்த ஒரு தொகுதி ஆயுதங்கள் கிளிநொச்சியில் மீட்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோரக்கன்கட்டு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதங்களை இரகசியத் தகவல்களின் அடிப்படையில் மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளர்.

மீட்க்கப்பட்ட ஆயுதங்களில் ஆட்லரி செல்கள்- 9, ஆட்லரி செல் பியுஸ்கள்- 5, ஆர் பிஜி செல்கள்- 2, ரி 56 ரைபில்- 2, ரி 56 ரைபில் மகசின்கள்- 6, 4 மில்லிமீற்றர் எல்.எம்.ஜி.ஆர் ரைபில்- 1, கைக்குண்டுகள் 19, கிளைமோர் குண்டுகள்-3, விடுதலைப் புலிகளின் அங்கிகள்- 8, சி – 4 ரகபோர் வெடிபொருள் மருந்து 360 கிராம், டிக்னைட்டர் 15, 81 மில்லிமீற்றர் செல்கள்- 4, 60 மில்லிமீற்றர் குண்டு- 1, பராகுண்டு- 3, விடுதலைப் புலிகளின் தயாரிப்பு அருள் குண்டு 2, சயனைட் குப்பிகள்- 2, புஸ்ட்டர்- 4, குண்டு துளைக்காத ஜக்கட்- 1, தொலைத் தொடர்புக் கருவிகள்- 5, ரவைகள் 1200 ஆகியனவே மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com