Wednesday, July 10, 2013

கார்ட்டூன் திரைப்படங்கள் மூலம் சிறுவர்கள் மனதளவில் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்!

வெளிநாட்டு கார்ட்டூன் திரைப்படங்கள் மூலம் சிறுவர்கள் மனதளவில் அழுத்தங்களுக்கு உட்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

களனி பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு ள்ளது.

வெளிநாட்டு கார்ட்டூன் திரைப்படங்களின் ஊடாக மேற்குலக நாடுகளின் முத லாளித்துவ சிந்தனை இலங்கை சிறுவர்கள் மத்தியிலும் ஊடுறுவதாக களனி பல் கலைக்கழகத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

வர்த்தக அனுகூலங்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாது சமூக பொறுப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஊட கங்களும் கார்ட்டூன் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தற்போது வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சிறுவர் கார்ட்டூன்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலங்கள் இதுவரை அமுல்படுத்தப் படவில்லையென தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் புதிய சட்டமூலங்களை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com