Sunday, June 16, 2013

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இக்காலகட்டத்தில் மாகாண சபைகளுக்கு தேவையற்றதாம் என்கிறார் டி.எம்!

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டு, மேற்குல அழுத்தங்களால் இலங்கையில் மீண்டும் அரசியல் ஸ்தீரமற்ற நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், 13 ஆவது அரசியல மைப்பு திருத்தத்தில் அடங்கியுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு தேவையற்றதென பிரதமர் டீ.எம். ஜயரட்ண தெரிவித்துள்ளார். அத்துடன், பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்குவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் எனவும், இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இவை வீண் மோதல்களை ஏற்படுத்த வழிவகுக்கலாமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாடு அமைதியா சூழ்நிலையில் சிறந்த பொருளாதார வளர்ச்சியில் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் 13 ஆவது திருத்தத்தில் உள்ளக்கடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு அவசியமற்றவை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com