Sunday, June 16, 2013

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே !! என்னுடைய வழியில் நீங்களும் வாங்கோ.. மஹிந்தருக்கு பின்னால் போவோம் என்கிறார் கீதாஞ்சலி.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே மக்களின் வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் அரசுடன் இணைந்து செயற்படுங்கள் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கிளிநொச்சியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஏ9 வீதி திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய கீதாஞ்சலி் ,

எம் தலைவருடைய தூரநோக்கு ஒரு குறுகிய அரசியலாய் இல்லாமல், எமக்கு மாத்திரமல்ல எமது பரம்பரையையே பலப்படுத்தும் அளவிற்கு அபிவிருத்தியுடனிணைந்த தூரநோக்குடைய ஒரு தலைமைத்துவமாகும். இப்படியொரு தலைமை முன்னர் இருந்ததுமில்லை இனி இருக்கப்போவதும் இல்லை !! உண்மையிலேய ஒரு மனிதநேயமுள்ள இன மத பேதமற்ற ஒரு தலைவரே எமது ஜனாதிபதி அவர்கள், ஆனால் இன்று குறுகியநோக்கடன் அரசியல் லாபங்களைத்தேடி அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்ற பலர் இந்த அபிவிருத்திகளையெல்லாம் ஏளனம் செய்பவர்களாகவும் வறுமையை போக்க வற்றவர்களாகவும் இன்று வெறும் வாய்ப்பேச்சினால் அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று வடமாகாணத்தை பொறுத்தவரையிலே 70ஆயிரம் பெண் தலைமைத்துவங்களும் அதிக ஏழ்மை, வேலையில்லாப்பிரச்சனை போன்ற பலவற்றிற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற எமது சமுதாயத்திலே இன்று பல அரசியல் கட்சிகள் மக்கள் நலன் கருதி அரசியலில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் பிரிந்து நின்று அரசியலில் பல பிளவுகளை ஏற்படுத்தி இன்று ஒரு தூசதனமான அரசியலை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று கிராமம் நகரம் பிரதேசம் என்று நாளுக்கு நாள் எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டு இருக்கின்றது . எமது தலைவர் பலநாடுகளின் கடனுதவிகளுடனும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் எமது தேசத்தை அபிவித்தி செய்து வருகின்றார், மஹிந்த சிந்தனயினூடாக இன்று வீட்டுத்திட்டங்கள் எமக்கு கிடைக்கின்றன. அது மாத்திரமல்ல அனைத்து மக்களுக்கும் மின்சாரம், அனைத்து மக்களுக்கும் கல்வி , காணி வாழ்வாதாரம் தரம் உயர்வு போன்ற நற்சிந்தனைகள் நிறைந்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்,

எமது அரசால் எமக்குத்தீர்வுகள் நிச்சயம் கிடைக்குமென்று நம்மிக்கையை அவர் எமது ஆழ்மனதில் ஊற்றியவராகவே அவரது ஒவ்வொரு அமைவும் உள்ளது, எமது தலைமைத்துவத்தினால் மாத்திரமே தழிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியும், வறட்டு கௌரவத்தையும் பிடிவாதத்தையும் மக்களுக்காக விட்டுக்கொடுத்து தமது அகந்தையை சற்றுக்குறைத்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டும்!!

மக்களை நேசிக்கிரவரே இங்கு தலைவனாய் ஆகியிருக்கிறார். ஆகவே மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவும் வேண்டுமானால் அரசுடன் இணைந்தால்தான் அது சாத்தியமாகும்!!

இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சர் ரிசாட்பதியுதீன் ஆகியோரின் செயற்பாடுகள் கூட அரசுடன் இணைந்ததால்தான் மக்களிற்கு நன்மையழிப்பவையாக இருக்கின்றது.

ஆகவே மக்களின் நன்மையின் உண்மையான அக்கறையிருந்தால்!! தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணக்கப்பாட்டுடனான பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com