Sunday, June 16, 2013

1,200 பொலிஸாருக்கு எதிராக தீவிர விசாரணைகள்!

கப்பம், கொலை, கொள்ளை, பேன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள 1,200 பொலிஸாருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு என பல்வேறு மட்டங்களில் தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் அலுவலக மற்றும் தனிப்பட்ட தரவுகளையும் சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டுவதற்கான துரித நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com