Saturday, June 29, 2013

LLRC யை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் வழங்கும்.- கமலேஷ்

கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருமென அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்ஷியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படாமை குறித்து விமர்சிப்பதா அல்லது கூடிய வேறுபாடொன்றை ஏற்படுத்துவதா என்பதே சர்வதேச சமூகத்தின் கேள்வியாக உள்ளதாகவும், பொதுநலவாய அமைப்பானது இவற்றில் பின்னதையே பார்கின்றது எனவும், பொதுநலவாய அமைப்பின் உதவி கிடைக்கப் போகும் விடயங்களை இலங்கை அரசாங்கம் இப்போதும் கூட இனங்கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமைகள், ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் சமூகங்களுக்கிடையே அன்னியோன்னிய கண்ணியம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பொதுநலவாய விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதில் தாங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக ஷர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுநலவாய மென்வலு மற்றும் திரைமறைவுப் பங்களிப்புக்களுக்கு குறுகிய காலத்தில் எதிர்மறை விளைவுகள் அடிக்கடி ஏற்படலாம். ஆயினும் வெற்றியானது உண்மையான முன்னேற்ற வடிவத்தில் நீண்ட காலத் தவணையில் மாறாத தன்மையுடன் சாதகமாகவே ஈட்டப்பட்டு வருகின்றதெனவும், வெளிநடப்புச் செய்வதும் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதும் பொதுநலவாய அமைப்புக்கு நிரந்தர அவமானத்தையே தேடித்தருமென, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com