Saturday, June 29, 2013

பொலிஸாருக்கு கப்பம் கொடுத்து கள்ள மண் அகழும் கள்வன்.

அரச அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றேல் ஜனாதிபதியிடம் முறையிடுவோம். துண்டு பிரசுரம்.

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு வெல்லாவெளி பொலிசார் துணை போவதாக போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்தல் என்ற தலைப்புடன் போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் என்ற உரிமை கோரலுடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டு வெளியாகி இருக்கும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

எங்கள் பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. ஆற்று மணல் ஏற்றுதல், சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் ஏற்றுதல் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆற்றுமணல் ஏற்றுவதற்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படுகின்ற அனுமதிபத்திரம் தொடர்ச்சியாக கணேசபுரத்தைச் சேர்ந்த இளஞ்செளியன்(குயில்) என்பவர் EP RC 6440 இந்த இலக்க உழவு இயந்திரத்திற்கே கொடுக்கப்படுகின்றது. இவர் 03 லோட் மணல் ஏற்றுவதற்கு அனுமதியினைப்பெற்று பொலிசாருக்கு பணத்தைக் கொடுத்து இரவு பகலாக தொடர்ச்சியாக நான்கு ஐந்து நாட்களுக்கு மணல் ஏற்றுகின்றார்

இவருக்கு இவ்வாறான சட்டவிரோத செயலை செய்வதற்கு பொலிஸார் காவல் கொடுக்கினறனர். இதே போலத்தான் மரமும் வெட்டுகின்றார். இவரால் மணல் ஏற்றுவது மக்கள் பிரயாணம் செய்யும் இடங்களில் வேளாண்மை செய்யும் வயல்களில் இதை தட்டி கேட்டால் பொது மக்களுக்கு தகாத மிக கேவலமான வாத்தை பிரயேகத்தால் ஏசுகிறார் இவருக்கு வெல்லாவெளி பொலிஸார் பக்கபலமாக இருப்பதால்தான் இத்தனை சட்டவிரோத செயல்களையும் தைரியமாக செய்கின்றார் என அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

இது தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு பல முறை அறிவித்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவரும் இவ்வாறு நடவடிக்கை எடுக்காது இருப்பது பொது மக்களாகிய எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது இவரும் இவனிடமிருந்து பணம் பெறுகின்றார் போல. இதனால்தான் பிரதேசசெயலாளர் இச் சட்டவிரோத செயலை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் எனவும் மேலும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரனை செய்து இந்த இலக்கத்தையுடைய உழவு இயந்திரத்திற்கு அனுமதி வழங்குவதை நிறுத்த ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இதற்கு சரியான நியாயம் தங்களால் கிடைக்காத பட்சத்தில் எமது மக்களின் விடியலுக்காக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதைத்தவிர எமது மக்களுக்கு வேறு வழி இல்லை எனவே இந்த கடிதத்தை உதாசீனம் செய்யாது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொள்கினறோம் என மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு போரைதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

யு.எம்.இஸ்ஹாக்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com