புலிகளுக்கு ஆதரவாக நின்று, பிரித்தானிய பொலிஸார் சிங்களவர்களைத் தாக்கி காடைத்தனம் புரிந்துள்ளனர்! - ஹெல உறுமய
இங்கிலாந்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஜாத்திக ஹெலஉறுமய கோரிக்கைவிடுத்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டஅமைப்பாக இருந்தபோதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்புப் பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்குமுறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலானஅரையிறுதிப் போட்டியின் முடிவில், புலிகளின்ஆதவாளர்கள் சிங்களவர்களை தாக்கி, அச்சமின்றிவெளிப்படையாகச் செயற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கண்டித்து ஜாத்திக ஹெல உறுமயவின்ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். கிரிக்கெட்போட்டியின் இறுதியில், சுமார் 200 விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்கள், மிகவும் குழப்பமாக, வன்முறையாக செயற்பட்டு, சிங்கள கிரிக்கெட இரசிகர்கள் மீது இரும்புகம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர்.
இதற்கு முன்னர், இலங்கை அவுஸ்திரேலிய இடையிலானபோட்டியின் போது புலிகளின் ஆதரவாளர்கள்சிங்களவர்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டனர். மேலும் சிங்க்க் கொடியை மிதித்து கொண்டுபுலிக் கொடியை ஏந்தியும் இலங்கைக்கு எதிராக பதாகைளைஎடுத்து கொண்டும் மைதானத்தில் நேற்று போட்டிக்குத் தடையேற்படுத்தினர்.
அரையிறுதிப் போட்டியில் விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்தச் செயற்பாட்டில் ஈடுபட தயாராகி வருவதாக ,தூதரகஅலுவலகம் ஊடாக பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்குஅறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்கநடவடிக்கை எடுக்காதது குறித்து பிரித்தானிய அரசு மற்றும்பாதுகாப்பு தரப்பினருக்கு எமது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கிலாந்தில் இருக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த்த் தேவையானநடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசு, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்கதெரிவித்துள்ளார்.
3 comments :
We have the unforgettable experiences in Libya and now in syria
Whistle blower Julian Assange is an
example.
Honesty fairness loyal humility reasonable all these values are slowly disappearing around the world.
Real Satan is coimng out.
Post a Comment