சிறைச்சாலைக்குள் இருக்கும் பெண் கைதிக்கு கருத்தடை மாத்திரை எதற்கு? மாத்திரையை கொடுக்க முயன்றவர் கைது!
கருத்தடை மாத்திரைகளை பெண் கைதியொருவருக்கு வழங்க முயன்ற சந்தேக நபரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நபரெருவர் வெலிக்கட சிறைச் சாலையின் மகளிர் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு வழங்குவதற்கென கொண்டுவந்த உணவில் கருத்தடை மாத்திரைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
இதனையடுத்து குறித்த பெண்கைதிக்கு அவர் உணவினைக் கொடுக்க முற்பட்ட வேளையில், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment