Thursday, April 25, 2013

இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மூவர் கைது.

இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ பத்திரிகைகளில் வெளியான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரான்சில் மூவர் விசாரணைக்கென கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெயர் அறிவிக்கப்படாத போட்டோகிராபரால், டெலாஸ்கோபிக் கேமரா கொண்டு இளவரசியின் அரை நிர்வாணப் படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர், அப்போட்டோக்களை விற்க முயன்றபோது, பிரிட்டிஷ் பத்திரிகைகள் அந்த போட்டோக்களை வாங்க மறுத்திருந்தன.

பிரெஞ்ச் செலிபிரிட்டி சஞ்சிகை Closer, இந்த போட்டோக்களுக்கு பெரிய விலை கொடுத்து வாங்கி பிரசுரித்து, ஒரே நாளில் பிரபலத்தின் உச்சிக்கு சென்றது. அதையடுத்து, அரச குடும்பத்தினர், அந்த பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்தப் போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் யார் என்பதை வெளியிட முடியாது என தொடர்ச்சியாக மறுத்து வந்த குறித்த பத்திரிகைக்கு பிரெஞ்ச் கோர்ட் உத்தரவுப்படி போட்டோகிராபர்களை பிரெஞ்ச் விசாரணை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, Closer சஞ்சிகையின் தலைமை பிரசுரிப்பாளர் மற்றும் குறிப்பிட்ட போட்டோவை எடுத்த ஒரு போட்டோகிராபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை பிரெஞ்ச் டி.வி. TF1 இன்று வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com