Saturday, March 9, 2013

குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் குற்றவாளி- சர்வதேச காவல்துறை

புலிகளின சர்வதேச வலையமைப்பு முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான சர்வதேச காவல்துறையினரின் தேடப்பட்டு வருவோரின் சிகப்புப் பட்டியலில் இவருடைய பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், குமரன் பத்மநாதனை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக சர்வதேச காவல்துறை அறிவித்துள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்தியதாக குமரன் பத்மநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள இதே சமயம் குமரன் பத்மநாதன் தற்போது வடக்கில் மனிதாபிமான தொண்டுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com