மீண்டும் அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டவர்கள் கல்குடா கடற்பரப்பில் கைது
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் பல்வேறு மாறுதல்கள் தென்பட்டு வரும் நிலையில் இலங்கை அகதிகளின் அவுஸ்திரேலிய விஜயம் இன்னும் கட்டுபடுத்தமுடியவில்லை.
இந்த நிலையில் இன்றும் சட்டவிரோதான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர்கள் கிழக்கின் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர் .குறித்த கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
0 comments :
Post a Comment