இலங்கை இராணுவ இரகசியங்கள் வெளிநாட்டவருக்கு விற்பனை!
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த இராணுவ இரகசியங்கள் என்று கருதப்படும் பல புகைப்படங்கள் மற்றும் தகவல்களை உள்ளூர் அதிகாரி ஒருவரால் விற்பனை செய்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பல புகைப்படங்களை வழங்கியவர் வவுனியாவில் இயங்கும் வெளிநாடொன்றைச் சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவருவதாகவும் புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment