Sunday, February 3, 2013

ரயிலில் மோதி இளைஞன் பலி இருவர் படுகாயம்

கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் ரயிலில் மோதுண்டதில் இளைஞன் ஒருவன் பலியானதுடன் மற்றும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை காலியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் இடம்பெற்றுள்ளது.

வெல்லம்பிட்டியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com