தலைமைத்துவ பயிற்சியின் பின்னர், பதிவிற்கென மேலும் ஒரு வாரகால நீடிப்பு
பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களின் பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாவது கட்டம், இத்தினங்களில் இடம்பெறுகின்றது.
தலைமைத்துவ பயிற்சி காரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம், பல்கலைக்கழக பதவிற்காக வழங்கப்படும் தினத்தன்று செல்வதற்கு ஒரு சில மாணவர்களுக்கு முடியாமையால்தலைமைத்துவ பயிற்சிக்கு பின்னர், ஒரு வார காலத்தை பதவிற்காக வழங்க, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாணைக்குழுவின் மேலதிக செயலாளர் கலாநிதி பியரட்ன பிரேமகுமார, ‘பல்கலைக்கழகங்களில் புதிய கல்வியாண்டு, அடுத்த வருடம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. உரிய பதிவு ஆவணங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் தகைமை பெற்றுள்ள மாணவர்களுக்கு அனுப்பப்பிவைக்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவுகள் தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷெனிகா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment