மற்றுமொரு சாதனை படைத்த சச்சின்!!
மும்பை - ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் மும்பை அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் சதமடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் அதிக சதம் அடித்த (81) கவாஸ்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறும் இராணி கோப்பை போட்டியில், மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி 526 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு களமிறங்கியுள்ள மும்பை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 333 ஓட்டங்களை எடுத்தது. இதன் போதே சச்சின் டெண்டுல்கர் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
உள்ளூர் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளது போன்று இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் டிராகுல் டிராவிட் 64 சதங்களுடன் உள்ளார்.
0 comments :
Post a Comment