Thursday, February 28, 2013

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இல்லை- அமைச்சர் கெஹெலிய

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 2013ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மாத்திரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஊடக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com