16வது பாப்பரசர் பதவி விலகவுள்ளார் ? வரலாற்றில் முதற்சம்பவத்தால் அதிர்ச்சியில் கத்தோலிக்கர்கள்
பதினாறாவது பாப்பரசர் பெனடிக்ற் ஒருபோதும் எதிர்பாராத வகையில் பாப்பாண்டவர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க திருச்சபை தலைவரின் எதிர்பாராத இப்பதவி விலகலுக்கான காரணங்கள் எதுவெனத் தெரியவரவில்லை.
பாப்பாண்டவர் ஜோன் போல் மரணமடைந்ததைத் தொடர்ந்து 85 வயதான பதினாறாவது பெனடிக்ற் பாப்பாண்டவர் ஆனார்.
பாப்பாண்டவர்கள் பதவி விலகுவது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஆனால் பதவியிலிருக்கும்போதே பாப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்த் தடவையாகும்.
0 comments :
Post a Comment