Friday, January 18, 2013

அவுஸ்திரேலியா அகதிமுகாமில் குழந்தையை பிரசவித்த நமது பெண். குழந்தையை பார்க்க கணவனுக்கு அனுமதி மறுப்பு.

விலாவூட் தடுப்பு முகாமில் கடந்த பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளின் வாகன சாரதியாக இருந்த தமது கணவனை பறிகொடுத்த அவர் இரண்டு பிள்ளைகளுடன் 2010 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அரசியல் அடைக்கலம் பெற்ற ரஞ்சனி என்ற இலங்கை தமிழ்ப் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

சில காலம் தடுப்பு முகாமில் இருந்த அவரை சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் அனுமதித்ததால் கணேஸ் என்பவரை மறுமணம் செய்து வாழ்ந்த சிறிது காலத்தில் அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுக்கூறி, ரஞ்சனி மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு (15.01.2013) செவ்வாய்கிழமை இரவு அவர் குழந்தை ஒன்றை தடுப்பு முகாமில் பிரசவித்துள்ளார்.

எனினும் ரஞ்சனியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் பார்வையிட கணவருக்கு பார்வையாளர் அனுமதி நேரம் மட்டுமே வழங்கப்படுவதாக தெரியவருவதுடன் தமது புதிய குழந்தைக்கு பார்த்தீபன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான பார்த்தீபனை தாயிடம் இருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்லப் போவதில்லை என்று ரஞ்சனியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com