Thursday, January 24, 2013

மீண்டும் போரட்டத்தை ஆரம்பிக்கின்றார் சகாதேவன்.


கடந்த பல வருடங்களாக இந்திய மீனவர்களால் இலங்கை மீன்வளம் சுரண்டப்படுவது தடுக்கப்படவேண்டும் எனக் குரல்கொடுத்து பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்ற போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் அவர்கள் மீண்டும் எதிர்வரும் 27ம் திகதி தனது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு விடுத்துள்ள அழைப்பு வருமாறு.

16.01.2013

தலைவர்கள்ஃ செயலாளர்கள்,
மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
வடக்கு மாகாணம்.


இந்திய மீனவர் அத்துமீறலால் எமது மீன்வளம் அழிக்கப்படுவதை கண்டித்து பேரணி


மேற்படி விடயம் சார்பாக எமது போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் திரு. வி.சகாதேவன் அவர்களால் கடந்த 10.12.2012 அன்று யாழ்ப்பாணம் குருநகரில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தின் 4ஆம் நாள் 13.12.2012 அன்று அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலும்இ வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள்இ சமாசங்களின் தலைவர்களின் அழைப்பின் பேரிலும் அங்கு வந்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து 01 மாத காலக்கெடு வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டதுடன் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டமும் முடித்து வைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்று 15.01.2013 திகதியுடன் என்னாலும் வடமாகாண மீனவர்சங்க பிரதிநிதிகளாலும் அரசுக்குக்கொடுத்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. ஆனால் எமது நோக்கம் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தபோதிலும் என்ன நோக்கத்தை முன்வைத்தோமோ அந்த நோக்கத்தை அடையும்வரை நாம் ஓய்வெடுக்க முடியாது. காட்டுப்பாடில்லாத இந்திய மீனவப் படகுகளின் அத்துமீறலால் எமது கடல்வளம் அழிக்கப்படுகின்றது. இது போதாதென்று எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி கோரி இந்திய மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 30 வருட காலமாக கடலுக்கு செல்லமுடியாமல் எமது மீனவர்கள் கால்வயிறு கஞ்சிக்கு போராடிக் கொண்டிருக்க இது வரைகாலமும் கள்ளமீன் பிடித்தவர்கள் இப்போது எங்கள் உலைப்பானைக்கே கை வைக்கப் பார்க்கிறார்கள்.

ஒரு ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல வருடம் ஒன்றிற்கு இந்திய மீனவர் அத்துமீறலால் நாம் இழக்கும் மீன்வளம் இருபத்தோராயிரம் கோடிக்கு மேல் (210இ000இ000இ000ஃஸ்ரீ ரூபா 210 பில்லியன்) இது எமது மக்களின் சொத்து. எமது மக்களுக்குச் சேரவேண்டிய பணம். இது எமது மக்களுக்கு கிடைக்க பாடுபட வேண்டியது எமது பொறுப்பு.

இதனை அரசாங்கத்திற்கும்இ இந்திய அரசுக்கும்இ சம்மந்தப்பட்ட சகலருக்கும் தெரியப்படுத்தி எமது மீனவசமுகத்தை அழிவிலிருந்து மீட்டு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்காக இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட 04 மாவட்டங்களிலும் 225 மீனவர் சங்கங்களும்இ 16 சமாசங்களும் 60இ000ற்கு மேற்பட்ட அங்கத்தவர்களும் உள்ளனர். இவைதவிர கரையோர கிராமங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள் என்பனவும் இதற்கு ஆதரவு தரவேண்டும். எமது மீனவ சமுகத்தின் வளமான எதிர்காலத்திற்காக அனைவரையும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்;.

மீனவர் அமைப்புக்கள் மடடுமல்லாது வடமாகாணத்தினைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பேதங்களை மறந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும்.

எமது நடைப்பயணம்இ பேரணி எதிர்வரும் 27.01.2013 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தில் ஆரம்பித்து வடமாகாணம் முழுவதும் கரையோரமாக நகர்ந்து முல்லைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் முடிவு பெறும். பேரணியின் முடிவில் முல்லைத்தீவில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெறும். கூட்டம் நடைபெறும் திகதி பின்னர் அறியத்தரப்படும்.

பேரணியின் பிரதான நோக்கங்கள்.

1. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்.
2. எமது கரையோர இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
3. எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தப் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர்கள் வி.சகாதேவன் தலைவர்இ போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புஇ தொலைபேசி 0779273042 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

'அச்சமில்லாத பிச்சையில்லாத தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்'

நன்றி


இவ்வண்ணம்

செயலாளர்,
போரால்பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com