Wednesday, January 16, 2013

சிறிதரன் எம்.பி க்கு எதிராக கிளிநொச்சி மக்கள் எழுப்பிய குரல் வானுயரக்கேட்டது. (வீடியோ +படங்கள்) இரண்டாம் இணைப்பு

சிறிதரன் ஐயா நாங்கள் மழையில் நனையும்போது நீங்கள் மலேசியா சென்றது ஆணுறைக்காகவா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையில் இருந்து ஆண் உறைகள் மற்றும் ஆபாசப்படங்கள், சீ10-4 ரக வெடிமருந்துகள் மீட்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போது சிறிதரன் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், எம்.பி யின் பிரத்தியோகச் செயலாளர் காந்தனைக் கைது செய்யக் கோரியுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது சிறீதரன் எம்.பி யின் அலுவலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட காமலீலைகள் தொடர்பிலான வாசகங்களையும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோகங்களாக ஏந்தியிருந்தனர்.

சிறிதரனின் அலுவலகத்திற்கு அரசாங்க , நிறுவனங்களில் வேலை மற்றும் உதவிகளுக்காக சென்ற பல பெண்களின் சுயவிபரக்கோவையுடன் அவர்களின் புகைப்படங்களை பெற்றுள்ள சிறிதரன் கோஷ்டியினர் அவற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதுடன் அவர்களில் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளமையும் தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது.

தமிழர் தேசம் தமிழர் கலாச்சாரம் என மூச்சுக்கு மூச்சு பேச்சு விடும் சிறதரன் அலுவலகத்தில் ஒழிந்திருந்து காடையர் கும்பலுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இச்செயல் மக்களை மிகவும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் ஒட்டுமொத்த வன்னி நிலப்பரப்பும் இணைந்திருந்தமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சவப்பெட்டிக்கு ஆணிகள் அறையப்படுகின்றமையை எடுத்தியம்புகின்றது.

சிறிதரனின் அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ள யுவதிகளின் படங்களை பாதுகாப்புத் தரப்பினர் வெளியிடுவார்களாயின் அது மேலும் பிரதேசத்தில் சிக்கலை தோற்றுவிக்கும் என ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com