Monday, January 28, 2013

ஷாருக்கான் பாகிஸ்தான் வந்தால் உரிய மரியாதை வழங்குவோம்-மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி சயீத் பேட்டி

நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்குமேயானால், அவர் பாகிஸ்தானுக்கு வந்து விடலாம். அவருக்கு பாகிஸ்தான் உரிய மரியாதையை வழங்கும் என பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் முஹம்மது சயீத் பேட்டியளித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த இந்தி நடிகர் ஷாருக்கான், 'என் சொந்த நாடான இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நான் விசுவாசமாக இருப்பதாக சில தருணங்களில் என் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனது தந்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். நான் ஒரு முழுமையான இந்தியன் என்பது தெரிந்திருந்தும் என்னை எதிர்த்து பேரணிகள் நடந்தன.

இந்த பேரணிகளில் பங்கேற்ற தலைவர்களில் சிலர், நான் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு தேசபக்தி என்பதே இல்லை என்று நினைக்கும் சிலரால், நேரடியாக தாக்கப்படும் ஒருவனாக சில வேளைகளில் நான் இலக்காகி உள்ளேன்' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த போது சயீத் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com