Thursday, January 17, 2013

பிரதம நீதியரசர் பதவி நீக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம் திருப்திகரமானதாக இல்லை- அமெரிக்கா அறிவிப்பு

குற்றப்பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விளக்கமானது அமெரிக்காவிற்கு திருப்திகரமாக இல்லையென்று அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோறியா நூலண்ட் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றப்பிரேரணை மீதான இலங்கை அரசாங்கத்தின் விளக்கமானது ஜனநாயகத்தை பாதுக்காத்தல் என்ற ரீதியில் திருப்திகரமானதாக இல்லை.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கை காரணமாக இனிவரும் காலங்களில் இலங்கைக்கான அமெரிக்க உதவி மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இப்போது எதிர்வு கூறமுடியாது எனவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com