Wednesday, January 16, 2013

சிராணியை மீண்டும் பிரதம நீதியரசராக்குங்கள்- சர்வதேச யூரிகள் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமைக்கு சர்வதேச யூரிகள் ஆணையகம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, பிரதம நீதியரசராக மீண்டும் ஜனாதிபதியினால் பணி நீக்கம் செய்யப்பட்ட சிராணி பண்டார நாயக்கவை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது, நீதிதுறையின் சுயாதீனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன்னொரு தாக்குதல் என்று தெரிவித்துள்ளதோடு, இதனை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com