Thursday, January 17, 2013

இலங்கைக்கு எதிராக செய்ய முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்கின்றோம் இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தின் நடைபெறும் கடத்தல் காணாமல் போதல், உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக உண்மை நிலைமைகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. மௌனதாக இராஜதந்திரரீதியில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாஙத்திற்கு எதிராக என்ன? செய்ய முடியுமோ! அதனை சத்தம் போடாமல் செய்து கொண்டே இருக்கின்றது என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவராலய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடத்தல், காணாமல் போதல், மீனவர்களின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் ஏன்? மௌனமாக இருந்து வருகின்றது என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளகிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com