Saturday, January 19, 2013

15 வயது சிறுமியை ஏமாற்றி 4 இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவலம்-இருவர் பொலிஸாரால் கைது

யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் 15 வயது சிறுமியை ஏமாற்றி தொடர்ச்சியாக நான்கு இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு கர்ப்பமான சிறுமி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடுரச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு தெரியாமல் இக்கேவலமான செயலை செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் தேடி பொலிஸ் வலைவீசியுள்ளது.

இதேவேளை யாழ்.நகர் பகுதியிலும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர் ஒருரும் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com