Friday, January 18, 2013

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முன்ற இராணுவ வீரர்- கத்தியால் குத்தபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

12 வயதுதான சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருவர் சிறுமியின் தந்தையால் பல முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதின் போது படுகாயமடைந்த நிலையில் குறித்த இராணுவ வீரர் ராஜாங்கனை கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ராஜாங்கனை, யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது

சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மேற்படி இராணுவ வீரர், அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்த பாலியல் தொடர்பான வீடியோக்களை சிறுமிக்கு காண்பித்த நிலையில் அவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறித்த சிறுமி சத்தமிட்டு கத்தியதை அடுத்து அங்கு விரைந்த சிறுமியின் தந்தை, இராணுவ வீரரை மடக்கி பிடித்து கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ வீரர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இராணுவர் வீரருக்கான சிகிச்சைகள் முடிவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 comments :

மணிவண்ணன். ,  January 18, 2013 at 2:22 PM  

மகிந்தரின் ஆட்சியில் நம்பட அமைச்சர் மாருக்கு நல்ல சாப்பாடு என்றது இவங்ட வண்டிகளை பார்க்க தெரியுதெல்ல. கறாட்டி பிளக்பெல்ட் என்று சொல்லிக்கொண்டு திரிந்த டக்கிளசுக்கே இந்த வண்டியெண்டால் சாப்பாடு எப்படி என்று கொஞ்சம் யோசித்து பாருங்கோவன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com