Saturday, December 1, 2012

ஈ.பி.டி.பிக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்கள் ஆர்ப்பாட்டம்!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிலையத்துக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மக்களும் உழவு இயந்திர சங்கத்தினரும் போராட்டம் ஒன்றை மேற்க்கொண்டனர். இப் போராட்டம் இன்று காலை 5.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை நடைபெற்றது. இதன் போது வடமராட்ச்சி கிழக்கில் ஈ.பி.டி.பி மேற்க்கொண்டு வரும் சட்ட விரோதமான மண் அகழ்வை நிறுத்த கோரியும் தொழிலாளர்ளுக்கு வழங்கபடாத சம்பள கொடுப்பனவை வழங்க கோரியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் பொது மக்களிடம் பேச்சு வார்தை நடத்தியதை தொடர்து போராட்டம் தற்காலிகமாக கைவிட்டனர். ஈ.பி.டி.பி மேற்கொண்டுவரும் சட்ட விரோதமான மண் அகழ்வை நிறுத்துமாறு மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com