Monday, December 3, 2012

ஜப்பானில் டனல் ஒன்றின் உள்ளே விபத்து கார்கள் எரிந்து நாசம்

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டு தீபிடித்து எரிய ஆரம்பித்தன. இவ்விபத்தில் சிக்கிய கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன.

Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

தலைநகர் டோக்கியோ நோக்கிச் செல்லும் பாதை மிகவும் போக்குவரத்து நெருக்கடியானது என்ற போதிலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக கார்கள் இல்லை.

சுமார் 5 கார்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும், மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஜப்பானிய டி.வி. சேனல், கியோடோ நியூஸ் தெரிவிக்கிறது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com