Monday, December 3, 2012

யாழில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், கொழுப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்தும இசம்பவத்தில் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com