Friday, December 7, 2012

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் 400 பேருக்கு இணைப்பு வீசா வழங்கப்பட்டது?

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உள்ள 400 புகலிடக் கோரிக்கையாளர் இணைப்பு வீசா வழங்கப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்கள் டார்வினிலிருந்து வெளியேறி விக்டோரியா, குயின்ஸ்லான்ட் போன்ற இடங்களில் குடியமர்வார்கள் என்றும் அச்செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் இவர்களுக்கு இணைப்பு வீசா வழங்கப்பட்டிருப்பதுடன், இவர்களுக்கு அடிப்படையான சில நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுமென அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இணைப்பு வீசாக்கள் வழங்கப்படுமென கடந்த வருடம் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து இதுவரை 8500 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இந்த இணைப்பு வீசாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com