Friday, November 23, 2012

யாழில் அதிக நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தினால் பொது மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் அடிக்கடி மின்சாரமானது கூடியளவு நேரம் எந்தவிதமான முன்அறிவித்தல்களும் இன்றி துண்டிக்கப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மின்சார திருத்த வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமை இதிலும் குறிப்பாக காலை 8 மணி முதல் 5 மணிவரையே துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அது 8 மணி வரை இழுத்தடிக்கப்படுகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com