Friday, November 30, 2012

மாத்தளை வைத்தியசாலையில் இருந்து மேலும் எலும்புக் கூடுகள் மீட்பு

ஆறு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் பல மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்த மனித எலும்புக்கூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த இடத்தில் மேலும் தேடுதல் நடாத்தப்பட்டது.

இதன்போது மேற்படி வைத்தியசாலை வளாகத்திலிருந்து மேலும் 10 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இருந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப் பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பான விசாரணையை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com