Monday, November 5, 2012

கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் பலி -ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம்

அல்லைப்பிட்டிப் பகுதியில் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிவராசா ஜதுசன் வயது 5 என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஒரு வாராத்தில் இரண்டு சிறுவர்கள் ஊர்காவற்றுறைப் பகுதியில் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து மரணமாகியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com