குமண சரணாலயத்திற்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதாம்.
குமண தேசிய சரணாலயத்துக்கு பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வருவதாக வனவளத் திணைக்கள பேச்சாளர் ஹசினி சரத்சந்திரா கூறுகின்றரார். நீண்டகாலம் மூடப்பட்டிருந்த இச்சரணாலயம் யுத்தம் முடிந்த பின்னர் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் உண்ணாட்டு சுற்றுலாப் பயணிகள் 3500 பேர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 500 வருகை தந்திருப்பதாக அவர் கூறினார்..
பறவைகள் சரணாலயமாகப் பேர்பெற்ற குமண 18149 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலப்பகுதியில் 10000 மைல்களுக்கு அப்பாலிருந்து பறவைகள் இங்கு வந்த செகின்றன.
0 comments :
Post a Comment