Wednesday, October 31, 2012

தொடர் மழையால் 50 ஆயிரம் பேர் பாதிப்பு அனர்த முகாமைத்துவ நிலையம்

தொடர் மழை காரணமாக நாடு முழுவதிலும் 49ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்..

இதன் காரணமாக 65 வீடுகள் முற்றாகவும் 488 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவிலான மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com