Wednesday, October 31, 2012

விவேகானந்தரின் 150 வது ஜனன தினத்தையொட்டி ரதபவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும்

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினவிழாவையொட்டி இன்று புதன் கிழமை காரைதீவில் மாபெரும் ரத பவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும் கோலாகமாக எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.காரைதீவு பொதுமக்களால் நடாத்தப்பட்ட இவ் ரதபவனி ஸ்ரீ சாரதா சிறுமியரில்லத்தில் ஆரம்பமானது.அங்கு மட்டக்களப்புஇ.கி.மிசன் தலைவர் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமி யோகீரானந்தா ஜீ ஆகியோர் ஆன்மீக அதிதகளாககலந்துகொண்டு சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

சிக்காக்கோ உரையாற்றிவிட்டு இந்தியா வந்த சுவாமிக்கு எவ்வாறு இராமநாதபுர மன்னன் தானே வண்டியிழுத்து வரவேற்பளித்தானோ அவ்வாறு இங்கும் நடாத்தப்பட்டது.

பின்பு ஊர்வலம் இடம்பெற்றது.ஆலயங்கள் பாடசாலைகள் ஊர்ப்பொதுநல அமைப்புகள் அனைத்தும் கலந்து சிறப்பித்தன. அவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சுவாமி கபாலீஸானந்தா ஜீ ஆசியுரையாற்றுகையில் சுவாமி தேசத்தை தட்டியெழுப்பியதோடு இந்து சமய எழுச்சிக்கும் வித்திட்டவர்.அவரது 150 வது ஜனன தினத்திலே இவ்வாறாள எழுச்சிவழாவைக் கொண்டாடுவது பொருத்தமாகும்.

சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண் புனிதமானது.அப்பவனிக்கு எமது நல்லாசிகள் பல. என்றார்.

















படங்கள் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com