Tuesday, October 23, 2012

1 கிலோ தங்கம் அணிந்து சென்ற புலி கைது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1997 ஆண்டிலிருந்து 2000 ஆண்டுவரை புலிகள் அமைப்பிலிருந்த இவர் 2000 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்று அங்கும் அவ்வியக்க செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவரை கறுப்பு பட்டியலில் இணைத்து வைத்துள்ளனர். இவர் இலங்கைக்கு வந்து இறங்க அனுதித்த அவர்கள் திரும்பிச்செல்லும்போது கைது செய்துள்ளனர்.

இவர் கைது செய்யப்படும்போது 1கிலோ (120 தங்கப்பவுண்கள்) தங்கத்திலான நகை அணிந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com