Friday, September 7, 2012

இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கமைய எந்தவொரு சுற்றுலப் பயணியும், மதம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், நடமாடுவதற்கான சுதந்திரம், ஆகியவற்றறை அனுபவிப்பதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது எனவும், இந்நிலையில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜி. ஆனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் நாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தமிழக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜி. ஆனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com