Thursday, September 27, 2012

"மஹிந்தவுக்கு வெடி வைக்க பெரும்பாலானோர் தயார்" என்ற கட்டுரை தொடர்பில் விசாரணை

"ஜனாதிபதி மஹிந்தையருக்கு வெடி வைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளனர்" என்ற தலைப்பில் அண்மையில் வெளியான சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இக் கட்டுரை தொடர்பில் இதுவரை சண்டே லீடர் நிறுவனத்தைச் சேர்ந்த பலரிடம் இரகசியப் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸ், சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்கு மூலங்கiளை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

அத்துடன் இவ்வாக்கு மூலங்களை கொண்ட அறிக்கையை பொலிஸார் விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளனர. என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com