Saturday, September 29, 2012

குழந்தையை அடித்துக்கொன்று காட்டில் வீசிய பெற்றோர் கைது.

தங்களது இரண்டு வயது ஆண் குழந்தையை அடித்துக் கொன்று காட்டில் வீசிய, குருணாக்கல் மீகெ ல்லாவையைச் சேர்ந்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். பெற்றோரால் தாக்கப்பட்ட குறித்த குழந்தை 21 திகதி இறந்திருக்கிறது எனவும், சடலத்தைக் கொண்டு போய் அருகில் இருந்த காட்டில் ஒரு குகையில் போட்டுவிட்டு, பிள்ளையைக் காணோம் என்று முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் பொலிஸார் புலனாய்வு செய்து சடலத்தை மீட்டதோடு பெற்றோர்தான் பிள்ளையைக் கொன்றிருக்கின்றனர் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com